fbpx
Homeபிற செய்திகள்தருமபுரி: பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சி

தருமபுரி: பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சி

வேளாண்மை உதவி இயக்குனர் சரோஜா ஆலோசனைப்படி ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சி நல்லம் பள்ளி வட்டாரத்திற்கு உட்பட்ட எரிகோடிபட்டி கிராமத்தில் நடைபெற்றது.

வேளாண்மை அலுவலர் முனிரத்தினம் பயிற்சியில் தலைமை ஏற்று வேளாண்மை துறை மூலம் வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

ஓய்வு பெற்ற தோட்டக்கலை உதவி இயக்குனர் முகுந்தன் துவரை, உளுந்து, பச்சை பயிறு சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் துவரை நாற்று நடவு தொழில்நுட்பம், வயலளவில் நுனி கிள்ளுதல் மற்றும் டிஏபி கரைசல் தெளிப்பு குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.

பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் செந்தில்குமார் ஒருங்கிணைந்த முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு தொழில்நுட்பங்கள் பயிறு வகை பயிர்களை அறுவடை செய்த பின் மதிப்பு கூட்டி விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் லாபம் பெற வாய்ப்புள்ளது எனவும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

மேலும் இப்பபயிற்சியில் துவரையில் அதிகமான மகசூல் எடுத்ததற்காக மாநில அளவில் இரண்டாவது பரிசு பெற்ற முன்னோடி விவசாயி மாணிக்கம் கலந்து கொண்டு அவருடைய அனுபவங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். வட்டார தொழில்நுட்பம் மேலாளர் சிவசங்கரி உழவன் செயலி பற்றி கூறினார்.

உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கபிலன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆத்மா திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் பற்றியும் விளக்கமளித்தார். மேலும் இப்ப பயிற்சியில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img