கோவை சிவாஞ்சலியின் டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் மற்றும் குமரகுரு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் ‘ODYSSEY & The Soul’s Blossoming’ இசை-காட்சி நிகழ்ச்சி, ஆகஸ்ட் 15, 16-ம் தேதிகளில் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி ராமானந்த அரங்கில் நடக்கிறது.
கிட்டார் இசையை மையமாகக் கொண்ட இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இசை, காட்சியமைப்பு மற்றும் கலை நிகழ்த்துதல் மூலம் மனிதனின் வளர்ச்சி, மாற்றம் மற்றும் சுய உணர்வு வெளிப்படுத்தப்படுகிறது. ‘பே அஸ் யூ விஷ்’ முறையில் அனுமதி வழங்கப்படும் நிகழ்ச் சிக்கான டிக்கெட்டுகளை இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.



