தமிழ்நாடு டேக்வாண்டோ அசோசியேஷன் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் மாவட்ட அளவிலான 11வது டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் தூத்துக்குடி தருவை மைதானத்தின் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில், டேக்வாண்டோ அசோசியேஷன் செயலாளர் ஜெயராம், தலைவர் குமாரவேல், பொருளாளர் பார்வதிவேல் ஆகியோர் போட்டிக்கு முன்னிலை வகித்தனர்.
போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். டேக்வாண்டோ தேசிய நடுவர் ராஜா அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்வின் சிறப்பு விருந்தினராக 36 வது வட்ட திமுக செயலாளர் செல்வராஜ், வட்ட பிரதிநிதி டி.கே.எஸ். துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 265 வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்றனர். வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.
போட்டி மேலிட பார்வையாளராக மாநில செயற்குழு உறுப்பினர் கென்னடி மணி ராஜ் பங்கு பெற்றார். போட்டி நடுவராக ஜோசப் ஜெஃப்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.