fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சிக்கு கொசு மருந்து அடிக்கும் இயந்திரம், வாகனத்தினை வழங்கிய மேயர் ரங்கநாயகி

கோவை மாநகராட்சிக்கு கொசு மருந்து அடிக்கும் இயந்திரம், வாகனத்தினை வழங்கிய மேயர் ரங்கநாயகி

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 50 எண்ணிக்கையிலான கையடக்க கொசு மருந்து அடிக்கும் இயந்திரமும் மற்றும் 1 எண்ணிக்கையிலான கொசு மருந்து அடிக்கும் வாகனத்தினை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன் னிலை வகித்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய ஐந்து மண் டலத்திற்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் பொது மக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய தீவிர கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், கொசு ஒழிப்பு பணிக்காக ஏற்கெனவே 50 எண்ணிக்கையில் கையடக்க கொசு புகை மருந்து அடிக்கும் இயந்திரமும் மற்றும் 5 எண்ணிக்கையிலான கொசு மருந்து அடிக்கும் வாகனமும் பயன்பாட்டில் உள்ளது. மேலும், தற்போது வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் ஏ.எம்.எஸ்.பணியாளர்கள் வாரந்தோறும் பொது மக்கள் குடியிருப்பு/கட் டுமான இடங்கள், வணிக வளாகங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் அங்காடி பகுதிகளில் உள்ள கொசுப்புழு ஒழிப்பு பணிகளை ஈடுபட உள்ளனர்.

இந்நிகழ்வின்போது, துணை மேயர் வெற்றி செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் சிவகுமார். பொது சுகா தார குழு தலைவர் மாரிசெல்வன், மாநகர நல அலுவலர் (பொ) பூபதி, மண்டல சுகாதார அலுவலர்கள் குணசேகரன், ஆண்டியப்பன், பரமசிவம், ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலு வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img