fbpx
Homeபிற செய்திகள்11-வது ஆண்டு விழாவில் ‘ஜுவல் ஒன்’ சிறப்புச் சலுகைகள் அறிவிப்பு

11-வது ஆண்டு விழாவில் ‘ஜுவல் ஒன்’ சிறப்புச் சலுகைகள் அறிவிப்பு

உலகின் முன்னணி தங்க நகை விற்பனை நிறுவனமான எமரால்டு ஜூவல்லரியின் ஓர் அங் கமான ‘ஜுவல் ஒன்’, கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஷோரூ மில் 11-வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.

செய்தியாளர்கள் சந்திப்பில் எமரால்டு ஜுவல்லரி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சீனிவாசன், இயக்குனர் தியான் சீனிவாசன், சி.ஓ.ஓ வைத்தீஸ்வரன் ஆகியோர் கூறியதாவது:ஜுவல் ஒன் ஷோரூம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ளது.

விரைவில் இந்தியா முழுவதும் கிளைகளை தொடங்குவோம். எம ரால்டு நிறுவனம் தொடங்கி 39 ஆண்டு ஆகிறது. முன்னணி தங்க நகை உற்பத்தி நிறுவனமாக இருப்பதோடு பிற நாடுக ளுக்கும் நகைகளை 32 ஆண்டுகளாக ஏற்றுமதி செய்து வருகிறோம்.

அயானா, ஜினா, ஜியரா, நிர்ஜஹரா, ஜிலா எனும் நாங்கள் அறிமுகம் செய்த 5 கலெக்ஷன்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இன் னும் பல புதுவித டிசை ன்களை அறிமுகம் செய்ய உள்ளோம். கடந்த 11 மாதங்களில் 3 முக்கிய விருதுகளை பெற்றுள்ளோம்.

ஒரு மாதத்திற்கு 2000 டிசைன்களை எமரால்டு நிறுவனம் உற்பத்தி செய்கிறது. அதில் மிக சிறந்ததை ஜுவல் ஒன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம்.

மும்பை, டெல்லி, பெங்கால் போன்ற பகுதிகளில் உள்ள டிசைன் கல்லூரிகளில் இருந்து படித்து வெளிவரும் சிறந்த மாணவர்கள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட வடிவமைப்பு கலைஞர்களை கொண்டு புதுவித மாடர்ன் நகைகள் வடிவ மைக்கப்படுகின்றன.

எமரால்டு நிறுவனம்

எமரால்டு நிறுவனம் ஒரு மாதத்துக்கு 3000 கிலோ தங்க நகைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. ஆண்டு விழாவை முன்னிட்டு டிசம்பர் 18 வரை தங்க நகைகளின் செய்கூலி 20 சதவீதம் தள்ளுபடியும், வைர நகை கேரட்டிற்கு ரூ.பத்தாயிரம் தள்ளுபடியும், வெள்ளி பொருட்களுக்கு செய்கூலி சேதாரம் இல்லை.

‘சொர்ண சக்தி’ என்ற நகை சேமிப்பு திட்டத்தில் இணைவோர் 11 மாதத்திற்கு பின்னர் நகைகள் வாங்கும்போது, 18 சதவீதம் வரை செய்கூலிகள் தள்ளுபடி வழங் கப்படும் என்றனர்.

படிக்க வேண்டும்

spot_img