கனரா வங்கியின் கோவை மண்டல அலுவலகம் II சார்பில் சிறந்த பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவிகள் 300 பேருக்கு வித்யா ஜோதி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் உதவித் தொகையாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் உதவித்தொகையை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் கோவை மாவட்ட மேலாளரும் துணை ஆட்சியருமான மகேஸ்வரி வழங்கினார். அருகில் கனரா வங்கியின் மண்டல மேலாளர்கள் நாராயண சாஸ்திரி, மோகன் முரளி விஸ்வநாதம் மற்றும் ஹரிஹரன் சபரிராஜ் ஆகியோர் உள்ளனர்.