கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் வணிகவியல் துறை சார்பில் துறைத்தலைவர் பாலகிருஷ்ணன் எழுதிய “மனிதவள பகுப்பாய்வு” என்ற புத்தகம் தொலைக்காட்சி பிரபலம் மற்றும் தமிழ் பேச்சாளர்
கொங்கு சாந்தாமணியால் வெளியிடப்பட்டது.
இதனை கல்லூரி முதல்வர் கற்பகம் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வினை தமிழ் துறை தலைவர்கள் பிரகாஷ், வினோதினி மற்றும் முனைவர் சிவக்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், என அனைவரும் கலந்து கொண்டனர்.