fbpx
Homeபிற செய்திகள்நிர்மலா கல்லூரியில் பாரதி நினைவு விழா

நிர்மலா கல்லூரியில் பாரதி நினைவு விழா

கோவை நிர்மலா மகளிர் கல்லூரி தமிழ்த்துறை அரசு உதவி பெறும் பிரிவு மற்றும்  கோவை பாரதி பாசறை  இணைந்து நடத்தும் பாரதி நினைவு விழா நிர்மலா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில்  செயலர்  அருட்சகோதரி குழந்தை தெரஸ்,  முதல்வர் அருட்சகோதரி மேரி பபியோலாவின் தலைமை வகித்தனர். தமிழ்த்துறைத் தலைவர்  மகேஸ்வரி வரவேற்புரையாற்றினார்.

பாரதி பாசறையின் தலைவர்  மோகன் சங்கர் முன்னுரை வழங்க

பாரதி பாசறையின் செயலாளர், கோவை அரிமாவின் முன்னாள் ஆளுநர்  ஜான்பீட்டர்  வாழ்த்துரை வழங்கினார்.

எழுத்தாளர், இயக்குநர், முனைவர் பாரதி கிருஷ்ணகுமார் பாரதி கண்ட புதுமைப்பெண் எனும் தலைப்பில் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை முதலில் மாற்ற வேண்டும் என்றும், மானமும் அறிவுமே மனிதனுக்கு அழகு என்று எழுச்சியுரையாற்றினார்.

இவ்விழாவினை தமிழ்த்துறை அரசு உதவி பெறும் பிரிவு பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img