fbpx
Homeபிற செய்திகள்நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டுவிழா

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டுவிழா

காரமடையை அடுத்துள்ள வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியின் தமிழ் மற்றும் பொருளியல் ஆசிரியர் அருள்சிவா கடந்த 5ம் தேதி சென்னையில் நடந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை பெற்றார்.
இந்த நிலையில் நேற்று நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் அருள்சிவாவிற்கு பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில நல்லாசிரியர் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற இரா அருள்சிவாவை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணி அமைப்பாளர் தாயனூர் ஆர்.பிரதீப், திமுக நிர்வாகிகள் வெள்ளியங்காடு ராஜண்ணன், ஆலயம் பாலு, பள்ளி தலைமை ஆசிரியர் சாக்ரடீஸ், குலசேகரன், செந்தில் குமார், வனிதா, கண்ணன் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img