கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் கற்பகம் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
மாணவர்கள் தான் நாளைய இந்தியாவை கட்ட மைக்கும், இளைஞர்கள். உலக நாடுகள் எல்லாம் நம்முடைய இளைஞர்களின் எழுச்சியினையும் எண் ணங்களையும் கண்டு பயம் கொள்கின்றனர். அந்தளவிற்கு அதிக இளைஞர்களை கொண்ட நாடு நம் இந்திய தாய் திருநாடு. இளைஞர்கள் எப்போதும் எழுமின், விழிமின், உழைமின் என்கிற தாரக மந்திரத் திற்கு ஏற்ப செயல்பட வேண்டும். இவ் வாறு அவர் பேசினார். இதனைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளின் நட னப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு நடைபெற்றது.
இந்நிகழ்வினை கல்லூரியின் மாணவர் மன்றமும் விளையாட்டுத்துறை மாணவர் அமைப்பும் ஏற்பாடு செய்தனர். இந்நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.