தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 104வது நிறுவனர் தின விழாவை முன்னிட்டு ரத்த தானமுகாம் நடைபெற்றது.
தூத்துக்குடியை தலைமையி டமாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 104வது நிறுவனர் தின விழா வங்கியின் தலைமை அலுவலகத்தில் பிரம்மாண்டமான கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
முன்னதாக தூத்துக்குடியில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி விஇ ரோட்டில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அலுவலக வளாகத்தில் அரசு மருத்துவமனை உடன் இணைந்து தமிழ்நாடு மெர் கன்டைல் வங்கி சார்பாக ரத்ததான முகாம் நடந்தது.
ரத்ததான முகாமில் வங்கியின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியமான சலீ எஸ்.நாயர் தொடங்கி வைத்து ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
வங்கி ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கி சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் வங்கியின் துணைத் தலைவர் பி.ஆர்.அசோக் குமார், தலைமை நிர்வாக மேலாளர் வின்சென்ட், தலைமை கணக்கியல் அதிகாரி சஞ்சய்குமார் கோயல், பொது மேலாளர்கள் ரமேஷ், டேவிட் ஜோஸ், ஜெயராமன் மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர் சாந்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



