fbpx
Homeபிற செய்திகள்ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்பு கிளினிக் துவக்கம்

ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்பு கிளினிக் துவக்கம்

கோவை மற்றும் மேற்கு தமிழ்நாட்டில் மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சையில் ஒரு குறிப்பிடத்தக்க வகையில், பிரத்தியேக ஹெச்.ஐ.பி.இ.சி (ஹைப்பர்தெர்மிக் இன்டராபெரிட்டோனியல் கீமோதெரபி) சிறப்பு கிளினிக் திறப்பு விழா ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் நடைபெற்றது. இதனை ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர்.ரகுபதி வேலுசாமி துவக்கி வைத்தார். விழாவிற்கு புற்றுநோய் சிகிச்சை துறை தலைவர் டாக்டர்.பி.சிவநேசன் முன்னிலை வகித்தார்.

இது குறித்து ஜி.கே.என்.எம். மருத்துவமனை சி.இ.ஓ டாக்டர் ரகுபதி வேலுசாமி, புற்றுநோய் சிகிச்சை துறை தலைவர் டாக்டர் சிவநேசன், டாக்டர் பிரவீன் ரவி சங்கரன், டாக்டர் அருள்ராஜ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த மருத்துவ மையத்தில், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், தீவிர மருத்துவ சிகிச்சை நிபுணர்கள், பிசியோதெரபிஸ்டுகள், உணவியல் நிபுணர்கள் மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சார்ந்த மருத்துவர்களை கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட குழு செயல்படுகிறது. இதன் மூலம் நோயாளிகளுக்கு முழுமையான பராமரிப்பு, குணமடைதல், மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரம் ஆகியன உறுதி செய்யப்படுகிறது.

இவ்வாறு கூறினர்.

படிக்க வேண்டும்

spot_img