நாமக்கல் அருகே முத்துக்காப்பட்டியில் 25-ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. பெரியண்ணகவுண்டா் குமாரசாமி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டிகளை இன்ஜினியர் அமெரிக்கா கே.செல்வம் தொடங்கி வைத்தாா்.
மாரத்தான், இசை நாற்காலி, கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல், சாக்கு ஓட்டம், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், ஓட்டப்பந்தயம், வாலிபால், கோலப்போட்டி, கபாடி போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
முன்னதாக காலை 7 மணியளவில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது இதில் 15 வயது முதல் 50 வயது வரை மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளா்களாக, நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன், பழனி ஜி.பெரியசாமி, முன்னாள் நாமக்கல் எம்பி ஏ.கே.பி.சின்ராஜ், கோஸ்டல் இளங்கோ, ராணா ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினா். விழாவில் முத்துக்காப்பட்டி கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனா்.