fbpx
Homeபிற செய்திகள்திமுகவின் பேச்சு போட்டியில் நிர்மலா கல்லூரி மாணவிகள் அசத்தல்

திமுகவின் பேச்சு போட்டியில் நிர்மலா கல்லூரி மாணவிகள் அசத்தல்

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, கோவை மாநகர் மாவட்ட  திமுக இளைஞரணி சார்பில் ‘என் உயிரினும் மேலான’ என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி டாடாபாத்திலுள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. 

மாநகர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் தனபால் தலைமை வகிக்க மாவட்ட செயலாளர் கார்த்திக் தொடக்கி வைத்தார். நடுவர்களாக லெனின், பொன்முத்துராமலிங்கம், சுகுணா திவாகர் ஆகியோர் இருந்தனர். 

போட்டியில் 48 மாணவியர்,  56 மாணவர்கள் என 104 பேர் கலந்து  கொண்டனர். இதில் 8 மாணவியர்,  4 மாணவர்கள் ஆக 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

நிகழ்ச்சியில் மேயர் ரங்கநாயகி, துணை செயலாளர் அப்பாஸ், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மணிகண்டன், லாராதேவ்கிருபா,  மாநில நிர்வாகி தமிழ்மறை, மீனா ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் நிர்மலா மகளிர் கல்லூரியில் இளநிலை முதலாண்டு ஆங்கிலம் பயிலும் யாழினி 10 ஆயிரம் ரொக்கமும் சான்றிதழும் புத்தகமும் பெற்றார். 

தொடர்ந்து அம்ரீனா, சாகிறா, சாஹிராபானு ஆகியோர் சான்றிதழும் புத்தகமும் பெற்று நிர்மலா மகளிர் கல்லூரிக்குப் பெருமை சேர்த்தனர்.

படிக்க வேண்டும்

spot_img