fbpx
Homeபிற செய்திகள்கோயமுத்தூர் மாவட்ட காப்பக குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி

கோயமுத்தூர் மாவட்ட காப்பக குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி

கோயமுத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் சில்ரன்  சாரிடபிள் ட்ரஸ்ட்  இணைந்து தேசிய விளையாட்டு  தினத்தை முன்னிட்டு  கோவை மாவட்டம்  அனைத்து குழந்தைகள் காப்பகத்திலுள்ள குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகளை கோவைபுதூர் ஆசிரம் மெட்ரிக்  மேல்நிலை பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நடத்தினர்.

இதில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் இல்லம் மற்றும் 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக  கோவை மாவட்ட உதவி மாவட்ட ஆட்சியர் அங்கித் ஜெயின், கோவை மாவட்ட துணை காவல் ஆணையர் சரவணன் குமார் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஹப்ஷா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று  வெற்றிபெற்ற குழந்தைகள் அனைவருக்கும் பரிசு மற்றும் கேடயங்களை வழங்கினர். 

மேலும் விழாவில் ஆஷ்ரம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி நிறுவனர் தேவேந்திரன், பள்ளி நிர்வாகிகள், பர்ஸ்ட் ஹார்ட்  பவுண்டேசன் தலைவர்  பாலசுப்ரமணியம்  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img