fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பாடுகள் குறித்து மிசோரம் மாநில அதிகாரிகள் கள ஆய்வு

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பாடுகள் குறித்து மிசோரம் மாநில அதிகாரிகள் கள ஆய்வு

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பாடுகள் குறித்து மிசோரம் மாநில அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்திற்கு மிசோரம் மாநில தோட்டக்கலைத்துறை சிறப்பு செயலர் ராம்தின்லைனி தலைமையில், அம்மாநிலத்தை சேர்ந்த தோட்டக்கலை துறை உதவி இயக்குனர்கள் லாலியான் சுவாலா, ராபர்ட் லால்ரின்சங்கா, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் வான்ஸ்லுபுயா, தோட்டக்கலை துறை மார்க் கெட்டிங் பிரிவு உதவி இயக்குனர் ஜூலி, நில வளங்கள் மற்றும் நீர் பாதுகாப்பு துறை உதவி இயக்குனர் லால் ரெம்ருதி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை உதவி இயக்குனர் ரொனால்ட் லால்ச்சு அனாவ்மா உள்ளிட்ட அதிகாரிகள் மேட்டுப்பாளையம் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உள்ள ஊட்டி உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு ஏல விற்பனை மையத்தை பார்வையிட்டனர்.

அங்கு, நீலகிரி விவசாயிகள் கொண்டு வரும் மலைப்பூண்டு மற்றும் கிழங்கு ஏலம் விடுவது குறித்து கள ஆய்வு மூலம் தெரிந்து கொண்டனர்.

பின்,நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் தயாளன்,துணை பதிவாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் செயல்பாடுகள் உருளைக்கிழங்கு களை தரம் பிரிக்கும் விதம், இயங்கும் விதம், ஏலம் விடும் முறை குறித்து அவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர்.

இதுகுறித்து நீலகிரி கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தயாளன் கூறுகையில், ‘‘ மிசோரமில் கூட்டுறவு விற்பனை சங்கத்தை செயல்படுத்த, சிறந்த கூட்டுறவு சங்கத்தின் செயல் பாடுகளை கள ஆய்வு மூலம் விபரங்களை சேகரித்து அங்கு செயல்படுத்த திட்டமிட்டு சிறந்த சங்கமாக நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் பற்றி சமூக வலைத்தளங்கள் மூலமாக தெரிந்து கொண்டு மிசோரம் அதிகாரிகள் இங்கு வந்துள்ளனர் என்றும், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க கட்டுப்பாட்டில் உள்ள மேட் டுப்பாளையம் விற்பனை சங் கங்களை பார்வையிட்டு இங்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் கேட்டு தெரிந்துகொண்டனர்.’’ என்றார்.

மேலும், இதுகுறித்து மிசோரம் மாநில தோட்டக் கலைத்துறை சிறப்பு செயலாளர் ராம்தில்லைனி ஐஏஎஸ் கூறுகையில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விவ சாயிகளின் நலனுக்காக பல் வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நீலகிரியில் உள்ள மலைவாழ் மக்கள், விவசாயிகள் உள்ளிட்டோரின் காய்கறிகள், உருளைகிழங்கு, பூண்டு போன் றவைகள் இடைதரகர்கள் இன்றி இங்கு ஏல முறையில் விற்பனை செய்யபடுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பயன் பெறுகின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் உள்ள உருளைகிழங்கு, பூண்டு ஆகி யவை ஏலம் விடப்பட்டதை நேரில் கண்டோம்.

இதேபோல் மிசோராமில் விவசாயிகளின் நலன் கருதி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அங்கு விளையும் விளை பொருட்களை நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் போல் விற்பனை செய்ய உள்ளோம்.

அதற்கான பயிற்சியை இங்கு கள ஆய்வு மூலம் கண்டுகொண்டோம். இதற்கான கட்டமைப்பு வலுவாக உள்ளதை கண்டோம்.விவசாயிகள், வியாபாரிகளுடம் கலந்துரையாடி உள்ளோம்.இந்த ஆய்வு எங்களுக்கு திருப்திகரமாக உள்ளது.
கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள், விவசாயிகளின் கருத்துகள், வியாபாரிகளின் வியாபார யுத்திகள் போன்றவற்றை ஆராய்ந்து மிசோராம் அரசுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உள் ளோம் என்று தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img