கேகேவி குழுமம், 1962ல் நிறுவப்பட்ட ஒரு புகழ்பெற்ற பிராண்டானது, உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் ஆசிரியர் தினத்தை இதயப் பூர்வமான காணொளி மூலம் நினைவுகூர்ந்து கொண்டாடி உள்ளது.
61 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்புடன் திகழும் கேகேவி குழுமம் ஒரு புகழ்பெற்ற பிராண்டாக உருவெடுத்துள்ளது. மேலும் அதன் துணை நிறுவனமான கேகேவி அக்ரோ பவர்ஸ் லிமிடெட், தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
1962ம் ஆண்டு நிறுவப்பட்ட கேகேவி குழுமம், 61 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சிறந்து விளங்கும் காலத்தின் சோதனையைத் தாங்கி வெற்றிகளை குவிக்கும் சில பிராண்டுகளில் ஒன்றாக மாறியுள்ளது.
தேசத்தின் பாரம்பரிய அடையா ளமாக திகழும் பட்டாடைகள் மற்றும் இதர ஆடைகளின் சிறந்த விற்பனை மையமாக திகழும் தி சென்னை சில்க்ஸ், மனதை கவரும் கலை நயத்துடன் உருக்கி வார்க்கப்பட்ட தங்க ஆபரணங்களின் கலைக்கூடமாக விளங்கும் பிஐஎஸ் ஹால்மார்க்கிங் தரச்சான்றை முதலில் பெற்ற ஸ்ரீ குமரன் தங்க மாளிகை, டெகத்லான், கேரிபோர், ஜாக்கி, உள்ளிட்ட முன்னணி பிராண்ட் ஆடைகளை வடிவமைத்து உருவாக்கி ஏற்றுமதி செய்யும் தலைசிறந்த டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி நிறுவனமான எஸ்சிஎம் கார்மன்ட்ஸ் அண்ட் ஸ்பின்னர்ஸ், மலைப்பூட்டும் கட்டிடங்கள், கட்டுமானங்களை எழுப்பி வரும் Teemage Precasting கேகேவி அக்ரோ பவர்ஸ் லிமிடெட் மற்றும் அதன் புதிய அங்கமான கேகேவி மீடியா வென்ச்சர்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை இந்தக் குழு கொண்டுள்ளது.
கேகேவி குழுமம் பல்வேறு துறைகளில் அறிவு, புதுமை மற்றும் வளர்ச்சியை ஊக்கு விப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது. அறிவு, கருணை மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றில் கட்டமைக்கப்பட்ட ஒரு சமூகத்தை கருவியாக திகழும் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் வழிகாட்டுதலுடன் நம்மை உயர்த்தும் கருவியாக திகழும் ஆசிரியர்களுக்கு பெருமையையும் அர்ப்பணிப்பையும் அளிக்கும் எங்களது கேகேவி மீடியா வென்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் லெனின் இயக்கத்தில் உருவான் ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ ஆவணப்படம் இந்தியாவின் சிறந்த கல்விக்கான திரைப்படம் என்ற தேசிய விருதை பெற்றுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதில் அதன் தயாரிப்பாளரும், கேகேவி குழுமத்தின் சேர்மனும் ஆன டி.கே-.சந்திரன் அனைவரிடமும் மகிழ்ச்சியை பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
வரும் காலங்களில் கேகேவி குழுமத்தின் புதிய ஒரு அங்கமான கேகேவி மீடியா வென்ச்சர்ஸ் சார்பில் சமூக செயல்பாடுகள் விழிப்புணர்வு, கலை, இலக்கியம், பல்துறைகள் சார்ந்த கருத்துக்களை வெகுஜன மக்களின் மனதில் பசுமரத்தாணியாய் பதிய வைக்கும் நோக்கத்தில் ஆவணப்படங்கள் தயாரிக்கப் படும் எனவும் அவர் தெரிவித்தார்.