கோவை வ.உ.சி மைதானத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாநகராட்சி, பேரூராட்சிகளில் ரூ.11.8 கோடி மதிப்பீட்டில் 27 முடிவற்ற பணிகளை, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வரங்கல் துறை அமைச்சர் கேஎன்.நேரு, மற்றும் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துச்சாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த விழாவில் ரூ.67.48 கோடி மதிப்பீட்டில் 558 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் ரூ.32.12 கோடி மதிப்பீட்டில் 703 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.