fbpx
Homeபிற செய்திகள்பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட நீர்வளத்துறை சார்பில் திருணவட்டார் வட்டத்திற்குட்பட்ட பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு செய்தியா ளர்களிடையே பேசுகையில்,

“தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் புயல் சின்னம் காரணமாக மழை பெய்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பாதிப்புகள் ஏற் பட்டுள்ளது. அதனடிப் படையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

எனவே மாவட் டத்தில் உள்ள மாந கராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்குட்பட்ட கடலோரப்பகுதிகள், மலை அடிவார பகுதிகள், தாழ்வான பகுதிகள், ஆற்றுப்படுகைகள், நீரேற்ற பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மழைநீர் உட்புகாதவாறு தடுப்புகள், மணல் மூடைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சாலையோரப் பகுதிகள், மலைப்பகுதிகள், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழமாலும், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றிட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை ஓரங்களில் உள்ள கழிவுநீர் ஓடைகளில் மழைநீர் தேங்காதவாறு தண்ணீர் செல்லும் வகை யில் சுத்தம் செய்து சீரமைக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணை களின் நீர்மட்டத் தினை ஆய்வு செய்ததோடு, அவ்வப்போது அணைக ளின் நீர் இருப்பு, நீர் வரத்து அகியவற்றினை கண்காணிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது.

மேலும் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற் படின் அணையிலிருந்து வெள்ளநீர் மறுகால் திறந்து விட்டால் அதனால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்றும், மதகுகள் நல்ல நிலையில் உள்ளதா என்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, நீர்வளத்துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.

உபரிநீர் வெளியேற்ற வேண்டியது இருந்தால் அதற்கு முன்னதாகவே பொதுமக்களுக்கு தகுந்த அறிவிப்புகள் வழங்கியும், நீர்நிலைகள் தாழ்வான பகுதிகளின் அருகாமையில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவுகள், குடிநீர், கழிப்பறைகள் உள்ளிட்ட அத்தியாவாசிய தேவைகளை நிறைவேற்று வதோடு, தேவையான அளவு இருப்பு வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

இந்த ஆய்வுகளில் அலு வலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img