கோவை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் கூட்டம் கிராஸ்கட் ரோடு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) தலைமை தாங்கினார்.
கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
2019 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் மாபெரும் வெற்றி, 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி. 2021 உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாட்டில் சரித்திரம் படைக்கும் வெற்றி.
2024-ஆண்டு தமிழ்நாடு, புதுவை 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி என தமிழ்நாடு முதல்வர் மு.க-ஸ்டாலின் தலைமையில் தொடர் வெற்றி பெற்று வருகிறோம். இதற்கு பொன்னான திட்டங்களை செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் முதல்வர் தான் காரணம்.
அவருக்கு இக்கூட்டத்தின் வாயி லாக மனமார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து கொள்கிறோம். ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்திய திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினைப் பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உரு வாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கைப் பிரகடனமாகவே இதுவரை இருந்து வந்திருக்கிறது. ஆனால், இந்த ஆண்டிற்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாகத் தெரியவில்லை.
மாறாக, அர சியல் காரணங்களுக்காக பீகார் மற்றும் ஆந்திரா மாநி லங்களை ஆளுவோருடன் மேற் கொள்ளப்பட்ட கூட்டணி ஒப்பந்தம் போன்றே உள்ளது. நிதிநிலை அறிக்கை மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக் கொள்ள ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது. தமிழ்நாட்டு மக்களை பாதிக்கக்கூடியது.
சமீபத்தில் சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க பேரிடர் நிவாரணத்தை வழங்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தியபோதிலும், இந்த ஒன்றிய வரவு-செலவுத் திட்டத்திலும் போதிய நிதி வழங்கப்படவில்லை.
37,000 கோடி ரூபாய் பேரிடர் நிவா ரணமாக வழங்குவதற்கான ஒரு விரிவான அறிக்கையினை தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த நிலையில், ஒன்றிய அரசு சுமார் 276 கோடி ரூபாய் மட்டுமே இதுவரை வழங்கியுள்ளது.
அதுவும் சட்டரீதியாக வழங்கப்பட வேண்டியது தான். ஆனால், இன்று உத்தரகாண்ட், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் மட்டுமின்றி, பீகார் மாநிலத்திற்கு மட்டும் 11,500 கோடி ரூபாய் பேரிடர் தடுப்புப் பணிகளுக்காக வழங்கப்பட உள்ளது. இது, தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அநீதியாகும்.
கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ இரயில் திட்டங்கள் குறித்த எந்த அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை. மொத்தத்தில் தமிழ்நாட் டின் நலன் முழுமையாக வேண்டுமென்றே புறக்கணிக்கப் பட வேண்டும் என்பது போல் அமைந்துள்ள நிதிநிலை அறிக்கை இது. தமிழக மக்கள் இவ்வாறு வஞ்சிக்கப்படுவது இந்திய நாட்டின் கூட்டாண்மைத் தத்துவத்திற்கு எதிரானது.
நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு மாநிலம் புறக்கணிக்கப்பட்டதை கோவை மாநகராட்சி திமுக மாமன்ற உறுப் பினர்கள் கூட்டத்தின் மூலம் வன்மையாக கண்டிக்கின்றோம். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநகராடசி மாமன்ற ஆளும்கட்சித் தலைவர் கார்த்திகேயன், மண்டலத் தலைவர் மீனா லோகு, இலக் குமி இளஞ்செல்வி கார்த்திக், தனலட்சுமி, கதிர்வேல், சுகாதா ரக்குழு தலைவர் மாரிச்செல்வன், நகரமைப்பு குழு தலைவர் சோமு என்கிற சந்தோஷ், நிதிக்குழு தலைவர் முபசீரா, கணக்கு குழுதலைவர் தீபா இளங்கோ, பணிக்குழு உறுப்பினர் மு,ராஜேந் திரன், கல்விக்குழு தலைவர் மாலதி, பணிக்குழு தலைவர் சாந்தி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.