மேற்குமண்டல காவல்துறையில் மேற் கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான போலீஸ் கமிஷன் ஆலோ சனை கூட்டம் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்றது.
மேற்கு மண்டலத்தில் காவல்துறையில் மேற் கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்த 5-வது போலீஸ் கமிஷன் ஆலோசனைக் கூட்டம் கோவை மாந கர போலீஸ் கமிஷ னர் அலுவலகத்தில் நடை பெற்றது.
ஓய்வுபெற்ற நீதிபதி செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோ சனை கூட்டத்தில் ஓய்வு பெற்ற ஆட்சியர் அலாவுதீன் மாற்றும், முன்னாள் டிஜிபி ராதா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் காவல் துறையில் பணி நியமனம், ஊதியம், பணிகளுக்கான நெறிமுறை, மன அழுத்தம், மன உளைச்சல் போக்குவது உள்ளிட்ட கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்கள் கிராந்தி குமார் பாடி,
அருணா, கிறிஸ்து ராஜ், ராஜகோபால் சுன்கரா, உமா, கார்மேகம், சராயு, சாந்தி, கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப், போலீஸ் கமிஷனர்கள் பால கிருஷ் ணன், பிரவீன் குமார் அபினபு, விஜயகுமாரி, மேற்கு மண்டல ஐஜி பவானிஸ்வரி, டி ஐ ஜி-க்கள் சரவண சுந்தர், ராஜேஸ்வரி, எஸ்பி-க்கள் பத்ரி நாராயணன், பிர பாகர், சாமிநாதன், ஜவகர், அருண் கபிலன், ராஜேஷ் கண்ணன், ஸ்டீபன் ஜேசுபா தம், சரோஜ் குமார் தாகூர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும், கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, மருத்துவத்துறை அதிகாரிகள், உளவியல் ஆலோசகர்களும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.