கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், வார்டு எண்.72க்குட்பட்ட எஸ்.ஆர்.பி.அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 700 மாணவியர்களுக்கு கோவை மாநகராட்சியில் முதல் முறையாக அடையாள அட்டைகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் வழங்கினர்.
உடன் நகராட்சி நிருவாக இயக்குநர் சிவராசு, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன், சண்முகசுந்தரம், துணை மேயர் வெற்றிச்செல்வன், துணை ஆயை£ளர்கள் செல்வசுரபி, சிவகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர் கார்த்திக்செல்வராஜ் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்ளனர்.