கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல் லூரியில் முதலாமாண்டு மாண வர்களுக்கான தொடக்க விழா நடந்தது.
கே.பி.ஆர் நிறுவனத்தின் தலைவர் முனைவர் கே.பி.ராமசாமி தலைமை தாங்கி பேசும்போது, உலகத் தரம் வாய்ந்த கல்வியை கொடுப்பதே கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் முக்கிய நோக்கம் என கூறினார்.
சிறப்பு விருந்தினர் பிரபல உயர்கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசு கையில், பொறியியலால் வளர்ச்சியடைந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் இனி ரும் காலங்களில் அதன் முக்கியத்துவம் அதிகரிக்கும்.
இது மட்டுமின்றி எதிர்வரும் காலங்களை எதிர்கொள்ள வகுப்பறைக் கல்வியை தாண்டி திறமைகளை அதிக ரித்துக் கொள்ள கே பி ஆர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி துணை புரியும் என்றார்.
கல்லூரி முதல்வர் முனைவர் மா.ராமசாமி, கல்லூரியில் உள்ள முக்கிய வசதிகளான ஆய்வகங்கள், மற்றும் செயல் முறை கல்வி மையங்கள், அதை எவ்வாறு பயன்படுத்தி கொள்வது என விளக்கினார்.
நான்கு ஆண்டு பொறியியல் கல்விக்குப்பின் வேலைவாய்ப்பு பெற, உயர் கல்வி மேற்கொள்ள, மற்றும் தொழில் முனைவோராக இக்கல்லூரி ஒரு தளமாக அமையும் என உறுதியளித்தார்.
தலைமை செயல் அதிகாரி முனைவர் நடராஜன், இக்கல்லூரி தொழித்துறை சார்ந்த கல்லூரியாக செயல்பட்டு படிப்பறிவிற்கும் நிஜ உலகத்திற்கும் ஒரு பாலமாக அமைந்துள்ளது என்றார்.