fbpx
Homeபிற செய்திகள்கோவை சுதந்திர தினவிழாவில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி கொடியேற்றினார்

கோவை சுதந்திர தினவிழாவில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி கொடியேற்றினார்

78வது சுதந்திர தினம் – மாவட்ட ஆட் சியர் கொடியேற்றி வைத்து மூவர்ண பலூன்களை பறக்க விட்டு, காவல் துறையின் அணி வகுப்பை ஏற்றுக் கொண்டார்.
நாடு முழுவதும் இன்று 78வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதே போல் கோவை வ.உ.சி மைதானத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து சுதந்திர தின விழாவில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்று கொண் டார். தொடர்ந்து வாகா எல்லையில் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் அணிவகுப்பை போலவே கோவை மாநகர ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பை மேற்கொண் டனர். அந்த நிகழ்ச்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. இதில் 52 பேர் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தில் முதல்முறையாக இது போன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என் பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து மூவர்ண பலூன்களை குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் வானத்தில் பறக்க விட்டார். தொடர்ந்து கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் 83 பேருக்கு,அரசு அலுவலர் கள் 140 பேருக்கு, மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள், மொழி போராட்ட தியாகி கள் என பலருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவரும் கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றது. அதே போல் வாஹா எல்லையில் நடைபெறும் போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img