கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் சிவகுமார், மண்டல குழுத்தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக் (கிழக்கு), தெய்வயானை தமிழ்மறை (மேற்கு), கதிர்வேல் (வடக்கு), தனலட்சுமி (தெற்கு), மீனாலோகு (மத்தியம்), நிலைக்குழுத் தலைவர்கள் தீபா தளபதிஇளங்கோ (கணக்குகள்), சாந்தி முருகன் (பணிகள்), முபசீரா (வரிவிதிப்பு&நிதி), மாரிசெல்வன் (பொது சுகாதாரம்), சோமு (எ) சந்தோஷ் (நகரமைப்பு), ராஜேந்திரன் (நியமனக்குழு) நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.



