fbpx
Homeபிற செய்திகள்பவானி ஆற்றில் வெள்ளம்: ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் கவலை

பவானி ஆற்றில் வெள்ளம்: ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதம் – விவசாயிகள் கவலை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை பேரூராட்சிக்கு உடபட்ட லிங்காபுரம், காந்தவாயல் மற்றும் மொக்கை மேடு ஆகிய கிராம பகுதிகள் பவானிசாகர் அணையின் நீர் தேக்க பகுதியில் அமைந்துள்ளது.

இந்த நிலையில் கடந்து சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை மற்றும் பவானியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அணையின் மொத்த நீர்தேக்க கொள்ளவான 110 அடியில் தற்போது 95 அடிக்கும் மேல் நீர் இருப்பு உள்ளது. இதனால் அணையின் நீர் தேக்க பகுதிகளான லிங்காபுரம், காந்தவாயல் மற்றும் மொக்கை மேடு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இதனால் அப்பகுதிகளில் சுமார் 200 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டு இருந்த வாழை மரங்கள் நீரில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து தண்ணீரில் இருந்த வாழைகள் அனைத்தும் ஈரப்பதம் அதிகரித்து அழுகி வருவதால் முதலீடு அனைத்தும் வீணாகி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img