fbpx
Homeபிற செய்திகள்கோவை அரசூரில் உள்ள கேபிஆர் பொறியியல் கல்லூரியில் ஏஐ சிறப்பு ஆய்வக தொடக்க விழா

கோவை அரசூரில் உள்ள கேபிஆர் பொறியியல் கல்லூரியில் ஏஐ சிறப்பு ஆய்வக தொடக்க விழா

கோவை அரசூரில் உள்ள கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நேவிகேட்ஸ் லேப்ஸ் உடன் இணைந்து அதிநவீன தொழில்நுட்பத் துடன் கூடிய செயற் கை நுண்ணறிவு சிறப்பு ஆய்வகத்தை கட்டமைத்துள்ளது.

ஏஐ சார்ந்த பல்வேறு புதுமைகளை உருவாக்கும் நோக்கில் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் வணிகப் பகுப்பாய்வியல் துறை முன்னெடுத்த இந்த ஆய்வகத்தில் உயர் செயல்திறன் கொண்ட கணினி ஜிபியு மற்றும் சிபியு, ஏஐ மாதிரிகள், மென்பொருள்கள் மற்றும் கருவிகள் ஆகியவை உள் ளன.

தொடக்க விழாவில் பங்கேற்ற நேவிகேட்ஸ் லேப்ஸ் நிறுவனத்தின் தலைமை இயக்க
அதிகாரி முனைவர் நந்தீஸ் குமார் “இந்த ஏஐ சிறப்பு ஆய்வகம் கற்றல், ஆராய்ச்சி, மற்றும் தொழில்துறையோடு இணைந்து செயல்படுதல் ஆகியவற்றுக்கு மையமாக செயல்படும்“ என்று குறிப்பிட்டார்.

மாணவர்களின் பொறியியல் பட்டப் படிப்போடு ஏஐ தொழில்நுட்பத்தில் பயிற்சியை வழங்கி ஒரு குறு பட்டப் படிப்பை வழங்க உள்ளதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் சரவணன் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img