நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் ரூ.10.91 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஆர்.குருமூர்த்தி உத்த ரவின்பேரில், நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
நாமக்கல் மட்டுமின்றி, ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி, சேந்தமங்கலம், குமாரபாளையம் நீதிம ன்றங்களிலும் இந்த மக்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அந்தந்த நீதிபதிகள் முன்னி லையில் நடைபெற்றன.
நாமக்கல் ஒருஙகிணைந்த கோர்ட்டில் முதலாவது அமர்வில் நீதிபதிகள் சாந்தி, விஜய்கார்த்திக் மற்றும் பிரவீனா ஆகியோரும், இரண்டாவது அமர்வில் நீதிபதிகள் விஜயகுமார், கண்ணன் மற்றும் விக்னேஷ்மது ஆகியோரும், திருச்செங்கோடு கோர்ட்டில் முதலாவது அமர்வில் நீதிபதிகள் மோகன்குமார், மற்றும் சுரேஷ்பாபு ஆகியோரும், இரண்டாவது அமர்வில் நீதிபதி சரண்யா மற்றும் வக்கீல் கல்பனா ஆகியோரும், ராசிபுரம் கோர்ட்டில் நீதிபதி திலீப் மற்றும் வக்கீல் ஜெயராஜ் ஆகியோரும், பரமத்தி கோர்ட்டில் முதலாவது அமர்வில் நீதிபதி நலினகுமார் மற்றும் வக்கீல் பிரபு ஆகியோரும், இரண்டாவது அமர்வில் நீதிபதி கைலாஷ் மற்றும் வக்கீல் வெற்றிவடிவேல் ஆகியோரும், குமாரபாளையம் கோர்ட்டில் நீதிபதி மாலதி மற்றும் வக்கீல் நடராஜன் ஆகியோரும் அடங்கிய அமர்வுகளில் வழக்குகள் விசாரணை நடைபெற்றது.
இதில் விபத்து, காசோலை, குடும்பநல வழக்குகள், ஜீவனாம்சம், தொழிலாளர் நலன், மின் பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அந்த வகையில் இந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,670 வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டு அவற்றில்1,000 வழக்குகளில் மொத்தமாக ரூ.10 கோடியே 91 லட்சத்து 96 ஆயிரத்து 837-க்கு தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.