fbpx
Homeபிற செய்திகள்விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: கோவை முந்தி விநாயகர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: கோவை முந்தி விநாயகர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்களின் முக்கிய விழாக்களில் விநாயக சதுர்த்தி. வருடம் தோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி தினம் அன்று விநாயக சதுர்த்தி ஆகக் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இன்று காலை முதலே விநாயகர் சதுர்த்தி உற்சாகமாக கொண் டாடப்படுகிறது.பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. வீடுகளில் சிறிய அளவு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தப்படும். இந்து அமைப்புகள் சார்பில் அனுமதிக்கப்பட்ட பொது இடங்களில் பிரம்மாண்ட சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும்.

அந்த வகையில் கோவை புலியகுளம் பிரசித்தி பெற்ற முந்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன் னிட்டு 2 டன் மலர்களால் ராஜ அலங்காரத்தில் விநாய கர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கோவை புலியகுளம் பகுதியில் பிரசித்தி பெற்ற முந்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகர் சிலை 19 அடி உயரம், பத்து அடி அகலம் கொண்ட சிலை ஆகும். இது ஆசியாவிலேயே இரண்டா வது உயரமான விநாயகர் சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முந்தி விநாயகர் கோவிலில் விநா யகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடைபெற்றது. 50 கிலோ சந்தன காப்பும், இரண்டு டன் மலர்களாலும் ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.

அதிகாலை முதலே விநாயகருக்கு 16 வகையான வாசனை திரவியங்கள் பொ ருட்களால் அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு விநாயகரை வழிபட வருகை தந்த வண்ணம் உள்ளனர். வருகை புரிந்து விநாயகரை வழிபட்டு வருகிறார்கள். அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

விநாயகர் சதுர்த் தியை முன்னிட்டு பக்தர்கள் வரிசையாக நின்று வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பல்வேறு இடங்களில் வண்ண வண்ண விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img