உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு வேலூரில் நகர கூட்ட அரங்கில் நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் ரத்த தான முகம் நடைபெற்றது.
முகாமிற்கு நாராயணி மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜி தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில தலைவர் கதிர் ஆனந்த் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டு இரத்ததானம் செய்தனர்.