கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றான மேட்டுப்பாளையம் அடுத்துள்ள அருள்மிகு வனபத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட உண்டியல்கள் மருதமலை சுப்ரமணியசாமி திருக்கோவிலின் துணை ஆணையர் செந்தில்குமார் முன்னிலையில், வனபத்ரகாளியம்மன் கோவில் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி தலைமையில் சூலூர் ஆய்வர் வடிவுக்கரசி மேற்பார்வையில் திறக்கப்பட்டன.
குறிப்பாக கடந்த ஜூலை.15ஆம் தேதி முதல் செப்.9ஆம் தேதி வரை பக்தர்கள் செலுத்திய 4 தட்டு காணிக்கைகள் மற்றும் 14 உண்டியல்கள் திறக்கப்பட்டன. இதில் 4 தட்டு காணிக்கைகளில் ரூ.22,79,369/-ஐ ரொக்கப்பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
இதேபோல் 14 உண்டியல்களில் பக்தர்கள் ரூ.26,95,700/- ரொக்கப்பணம்,தங்கம் 94 கிராம், வெள்ளி 126 கிராமை தங்களது நேர்த்திக்கடனாக செலுத்தியுள்ளனர்.
மொத்தமாக கடந்த 57 நாட்களில் மட்டும் வனபத்ரகாளியம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் ரூ.49,75,069 ரொக்கப்பணமும், 94 கிராம் தங்கம் மற்றும் 126 கிராம் வெள்ளியை செலுத்தியுள்ளனர்.
உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் திருக்கோவில் ஊழியர்கள், பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.