fbpx
Homeபிற செய்திகள்நெல்லித்துறை விவசாய நிலத்தில் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு

நெல்லித்துறை விவசாய நிலத்தில் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள நெல்லித்துறை பகுதி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அவ்வப்போது காட்டு யானை,மான், காட்டெரும,காட்டு பன்றி,சிறுத்தை, மலைப்பாம்பு உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் நேற்றிரவு நெல்லித்துறை ஊராட்சி மன்ற தலைவர் செல்வி மனோகரன் தோட்டத்தின் அருகே மலைப்பாம்பு இருப்பதைக்கண்ட அப்பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலினுக்கு தகவல் அளித்துள்ளார்.

விரைந்து சென்ற வனத்துறையினர் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை நீண்ட நேரம் போராடி லாவகமாக மீட்டனர்.

பின்னர்,அதனை வனச்சரகர் அறிவுறுத்தலின்படி அப்பகுதியில் உள்ள காப்புக்காட்டில் பத்திரமாக விடுவித்தனர்.இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img