யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, அதன் வெளிநாடுவாழ் இந்திய வாடிக்கையாளர்களுக்கான சந்திப்பு நிகழ்வை கோவையில் நடத்தியது. இதனை வங்கியின் கோவை பிராந்திய தலைவர் எஸ்.எஸ்.லாவண்யா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தபோது எடுத்தபடம். நிகழ்வில், இந்த திட்டத்தில் வரிச்சலுகைகள் தொடர்பான சேவை விவரங்களை வரிகள் நிபுணர் பிரபு எடுத்துரைத்தார். வங்கியின் துணை பிராந்திய தலைவர் முருகானந்தம் மற்றும் வங்கி அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.