கோவை, திருச்சி சாலை சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் ஞாயிறு பள்ளி

குழந்தைகளின் கிறிஸ்மஸ் கலை நிகழ்ச்சி நேற்று (ஞாயிறுக்கிழமை) மிகச் சிறப்பாக நடைபெற்றது.


அனேக குழந்தைகள் தங்களுடைய திறனை வெளிப்படுத்தினர்.


ஆலயத்தின் செயலர் ஜே.பி.ஜேக்கப், பொருளாளர் ஜே.ஏ.பரமானந்தம் ஆகியோர் குழந்தைகளை வரவேற்றனர்.


ஆயர் ராஜேந்திரகுமார் ஆரம்ப ஜெபம் நடத்தினார்.


நடனங்கள், நாடகங்கள் நிகழ்த்திய குழந்தைகளை திருச்சபை மக்கள் திரளானோர் கலந்து கொண்டு உற்சாகப்படுத்தினர்.
விழா ஏற்பாடுகளை ஞாயிறு பள்ளி கண்காணிப்பாளர் அனிதா காட்வின் செய்திருந்தார்.



