கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த வாரத்தில் தனியார் பேருந்து மோதி இருவர் உயிரிழந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை சார்பில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கண்காணித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் பகுதியில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா? என மேட்டுப்பாளையம் காவல்துறையினர் கண்காணித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.