தூத்துக்குடி மாவட் டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறுகின்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கலந்துரையாடல் நிகழ்வு பள்ளிக்கல்வித் துறையினால் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்ஸோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சிறப்பு அழைப்பாளர்களான மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ் மற்றும் குழந்தை நல குழு தலைவர் ரூபன் ஆகியோரால் எடுத்துக் கூறப்பட்டது.
தொடர்ந்து குழந்தை கள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையால் சமீபத்தில் வெளியி டப்பட்ட அரண் என்ற குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான புத்தகம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான துண்டு பிரசுரங்கள் சிறப்பு விருந்தி னர்களால் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியின் முடிவில் குழந்தைகளுக்கான அவசர உதவி என் 1098 தொடர்பான விழிப்புணர் பதாகை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 220க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.