கோவை சத்திரோடு அத்திப்பாளையம் பிரிவில் எஸ்என்எஸ் கல்லூரி மாணவர்கள் மற்றும் உயிர் தொண்டு நிறுவனம் சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
இதையொட்டி நடந்த நிகழ்வில், கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் எஸ்.அசோக்குமார் பங்கேற்று தலைகவசத்தின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அனைவரும் போக்குவரத்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.