கோவை டாடாபாத் துணை மின்நிலையத்திற்குட்பட்ட கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை (17ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் அழகேசன் ரோடு ஒரு பகுதி, சாய்பாபா காலனி ஒரு பகுதி, நாராயணகுரு ரோடு, அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனம், என்எஸ்ஆர் சாலை ஒருபகுதி, டிபி ரோடு ஒரு பகுதி, படேல் ரோடு,காளீஸ்வரா தெரு, மரக்கடை, செல்லப்ப கவுண்டர் தெரு, சிஎஸ்டபுள்யூ மில்ஸ், ரங்கே கவுடர் வீதி, ராம்நகர், அவினாசி ரோடு, காந்திபுரம் பஸ்நிலையம், கிராஸ்கட் ரோடு, சித்தாபுதூர், பாலசுந்தரம் ரோடு, டாடாபாத், அழகப்பா செட்டியார் தெரு, 100 அடி ரோடு,அலமு நகர், சிவானந்தா காலனி, ஹட்கோ, புதியவர் தெரு, ஆவராம்பாளையம் ஒரு பகுதி, பாரதி பார்க் 1, 2, 3, ராஜா அண்ணாமலை ரோடு, முருகன் மில்ஸ், தெப்பகும் மைதானம் ஆகிய இடங்களில் நாளை மின் விநியோகம் இருக்காது.
அதேபோல சூலூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட டி.எம்.நகர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், ரங்கநாதபுரம், காங்கேயம்பாளையம், எம்ஜி புதூர், ரவத்தூர் ஆகிய இடங்களிலும் நாளை (17ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.