ஈரோடு ஈவிஎன் ரோட்டில் உள்ள வாசன் கண் மருத்துவமனையில் வருகின்ற 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இம்மாதம் முழுவதும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது என்று மருத்துவமனை டாக்டர் மனோரமா எஸ் பஹேதி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: குழந்தை களுக்கு தற்போது கண் பார்வை குறைபாடுகள் ஏற்பட்டு வருகிறது. இதனை போக்குவதற்கு ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மேலும் குழந்தைகள் செல் அதிகநேரம் பயன்படுத்துவதையும், டிவி போன்ற வைகளை அதிக நேரம் பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் இதைக் கவனத்தில் கொண்டு குழந்தைகளுக்கு அதிக நேரம் விளையாடுவதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்க வேண்டும். 20 நிமிடங்கள் ஒரே பார்வையில் கவனத்தை செலுத்தி வந்தாலே கண்ணுக்கு பிரச்சனை ஏற்படும். எனவே 20 நிமிடங்கள் ஒரு செயலை செய்ய ஆரம்பித்தால் அதன்பின் தங்களது கவனத்தை வேறு திசைக்கு திருப்ப வேண்டும்.
மேலும் குழந்தைகளுக்கு தற்போது கண்பார்வை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஈரோடு வாசன் கண் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இலவச கண் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த இலவச முகாமில் கலந்து கொண்டு குழந்தைகளின கண்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியினை ஈரோடு வாசன் ஐ கேர் மருத்துவமனை கிளை மேலாளர் வெங்கடேசன், சேலம் கிளை மேலாளர் செல்வம், ஈரோடு கிளை மேலாளர் கோவிந்தராஜ் மற்றும் அலுவலர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.



