ஓபென் எலக்ட்ரிக்கானது ரீடெயில் விற்பனை நெட்வொர்க்கை வலுப் படுத்துவதற்கான திட்டங் களை அறிவித்துள்ளது.
வரும் நிதியாண்டு 27-ன் (FY27) இறுதிக்குள் தமிழகம் முழுவதும் 25 ஷோரூம்களை திறந்து, வணிகத்தை விரிவு படுத்த நிறுவனம் திட்டமிட்டுள் ளது. ஓபென் எலக்ட்ரிக் நிறுவனம் தற்போது தமிழ கத்தில் கோவை, தேனி, சேலம், காரைக்குடி மற்றும் கடலூர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் ஷோரூம் களை இயக்கி வருகிறது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரோர் ஈவோ மாடலுக்கு சந்தையில் கிடைத்துள்ள மிகப் பெரிய வரவேற்பைத் தொடர்ந்து இந்த விரிவாக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மாடல் அறிமுகம் செய் யப்பட்ட 15 நாட் களுக்குள்ளேயே 25,000க் கும் அதிகமான முன்ப திவுகளைக் கடந்து, இந்தியாவின் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் பிரிவில் தேவைகளுக்கான ஒரு தீர்வாக இந்நிறுவனம் இடம்பிடித்துள்ளது.
இந்த வணிக வேகத்திற்கு ஆதரவளிக் கும் வகையில், ஓபென் எலக்ட்ரிக் நிறுவனம் தற் போது 18-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் 150-க்கும் மேற்பட்ட ஷோரூம்கள் மற்றும் பிரத்யேக சேவை மையங்கள் மூலம் இயங்கி வருகிறது. அதே வேளையில், ஆண்டிற்கு 1 லட்சம் மோட்டார் சைக் கிள்களை தயாரிக்கும் திறன் கொண்ட உற்பத்தி ஆலை, ஜூன் 2026 முதல் தொடங்கப்படவுள்ளது விநியோகத்திற்கு (Deliveries) முன்னதாக தயாரிப்பை அதிவேகமாக அதிகரிக்க உதவுகிறது.
முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு ₹99,999 (எக்ஸ்-ஷோரூம்) என்ற அறிமுக விலையிலும், அதன்பின்னர் ₹1,24,999 (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையிலும் வழங்கப்படும் ரோர் ஈவோ (Rorr Evo), அதன் விலைப்பிரிவை விட கணிசமான அளவு உயர்வான அம்சங்களை யும் செயல்திறன் தொகுப் பையும் (performance package) வழங்குகிறது.
இது குறித்து ஓபென் எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ மதுமிதா அகர்வால் கூறுகையில், “இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டில் மிகவும் நம்பிக்கைக்குரிய சந்தைகளில் ஒன்றாக தமிழ்நாடு தொடர்ந்து உருவெடுத்து வருகிறது, மேலும் இந்த மாற்றத்தில் கோவை முக்கிய பங்கு வகிக்கிறது” என்றார்.



