10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கோபி சாரதா பள்ளி மாணவர்கள் சிறந்த மதிப்பெண்கள் பெற்றனர். இப்பள்ளி மாணவர்கள் இலக்கியா மற்றும் ஷபியுர் ரஹ்மான் 495/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றனர்.
மாணவி ரித்திகா 494 / 500 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், அபர்ணா, பூர்விகா மற்றும் வர்ஷினி 493 / 500 பெற்று மூன்றாமிடம் பெற்றனர். 57 மாணவர்கள் வெவ்வேறு பாடங்களில் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பாடவரியாக 100/100 மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை: கணிதம்- 9, அறிவியல் – 45, அறிவியல்-3.
மேலும் 18 பேர் 490, 46 பேர் 480, 137 பேர் 450 மதிப்பெண்கள் பெற்றனர்.
சாதனை மாணவர்களையும் ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் பெருமாள்சாமி, முதல்வர் இளமுருகு பாராட்டினர்.



