fbpx
Homeபிற செய்திகள்10 நீர் மோர் பந்தலினை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்

10 நீர் மோர் பந்தலினை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில் தமிழகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்கள் கூடும் இடங்களில் நீர், மோர் பந்தலை அமைக்க வேண்டும் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் ஆட்சியினருக்கு உத்தரவிட்ட நிலையில் விழுப்புரம் நகரத்தில், வள்ளலார் கோவில் எதிரில், நகர திமுக அலுவலகம், பெரியார் சிலை, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், நான்கு முனை சந்திப்பு சாலை, மருத்துவமனை எதிரில் புதிய பேருந்து நிலைய உள்ளிட்ட 10 இடங்களில் திமுகவினர் ஏற்பாடு செய்திருந்த நீர் மோர் பந்தலினை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.

நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் ஜனகராஜ் ஜெயச்சந்திரன் சக்கரை நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு செ.மணிகண்டன் வினோத் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உள்ளிட்ட திமுக வினர் பங்கேற்பு. அப்பொழுது பொதுமக்களுக்கு மோர், இளநீர் தர்ப்பூசணி, குளிர்பானங்கள் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, தொடர்ந்து கோடை வெயில் நீடித்து வரும் வரை தினமும் நீர் மோர் வழங்கப்படும் என தெரிவித்தார். மாவட்டம் முழுவதும் இந்த பணியானது இன்ற முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வரும் என தெரிவித்தார்

படிக்க வேண்டும்

spot_img