fbpx
Homeபிற செய்திகள்மண் பரிசோதனை செய்து உரங்கள் சரியான அளவில் இட்டால் அதிக மகசூல் கிடைக்கும் - வேளாண்துறை...

மண் பரிசோதனை செய்து உரங்கள் சரியான அளவில் இட்டால் அதிக மகசூல் கிடைக்கும் – வேளாண்துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை சார்பில் அட்மா திட்டம் மூலம் மானாவாரி மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பயிற்சி மேட்டுப்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் வேளாண்மை துறை உதவி இயக்குநர் பாக்கியலட்சுமி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த பயிற்சியில் கோவை வேளாண் பல்கலை உதவி பேராசிரியர் சங்கீதா,தேசிய உணவு பாதுகாப்பு இயக்க ஆலோசகர் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம்,பயறு வகை பயிர்களுக்கு நுண்ணூட்டங்கள் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர்.

அப்போது,பேசிய வேளாண் உதவி இயக்குநர் பாக்கியலட்சுமி, முதல்வரின் மன்னுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் மருத்துவ பயனுடைய ஆடாதோடா,நொச்சி உள்ளிட்ட உயிர் பூச்சிக்கொல்லி பண்புடைய தாவர பயிர்கள் ஒரு விவசாயிக்கு தலா 50 என உழவன் செயலியில் பதிவு செய்வதன் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும்,பிஎம் கிசான்,இ-கேஒய்சி, ஆதார் சீடிங் மற்றும் பேங்க் சீடிங் செய்யாதவர்கள் உடனடியாக செய்யுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதனையடுத்து பேசிய வேளாண்மை துறை துணை அலுவலர் நாராயணசாமி விவசாயிகள் கண்டிப்பாக மண் பரிசோதனை செய்ய வேண்டும். மண் பரிசோதனை செய்து பயிருக்கேற்ற உரங்கள் சரியான அளவில் இடும்போது அதிக அளவிலான மகசூல் கிடைக்கும் என்றார்.

இந்த பயிற்சியில் பட்டு வளர்ச்சி துறை ஆய்வாளர் சிவசங்கர், கால்நடை மருத்துவர் மகேஷ் குமார், வேளாண்மை உதவி அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தினேஷ் குமார், மற்றொரு தினேஷ் குமார் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img