நியூ டெல்லி, குருகிராமில் உள்ள எஸ்எஸ் இன்னோவேஷன்ஸ் இன்டர்நேஷனல் இன்க், தலைமையகத்திலிருந்து கோயம்புத்தூர் இந்துஸ்தான் மருத்துவமனை வரை, 2,362 கிலோ மீட்டர் தொலைவில் நடத்தப்பட்ட, இந்தியாவில் இதுவரை நிகழ்த்தப்பட்ட மிக நீண்ட தூர ரோபோடிக் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்ததை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

இந்த சாதனையில், கோயம்புத்தூர் இந்துஸ்தான் மருத்துவமனையின் சிறுநீரகவியல் ஆலோசகர் டாக்டர் ராமலிங்கம் மாணிக்கம், 28 வயதான ஒருவருக்கு மந்த்ரர் அறுவைசிகிச்சை ரோபோடிக் சிஸ்டத்தைப் பயன்படுத்தி மெகா யூரெட்டர்க் கான ரோபோடிக் யூரிடெரிக் ரீஇம்பிளான்டேஷன் மற்றும் புனரமைப்பு செய்தார். இந்த சாதனை ஒரு புதிய தேசிய சாதனையை அமைப்பது மட்டுமல்லாமல், மேம்பட்ட அறுவை சிகிச்சை ரோபோட்டிக்ஸ் மற்றும் நோயாளியின் பராமரிப்பை மாற்றியமைப்பதில் பாதுகாப்பான நீண்ட தூர இணைப்பு ஆகியவற்றின் ஆற்றலையும் காட்டுகிறது.
எஸ்.எஸ் இன்னோவேஷன்ஸ் இன்டர்நேஷனல் இன்கின் நிறுவனர் சேர்மன் சுதிர் ஸ்ரீவஸ்தவா, ஹிந்துஸ்தான் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை தலைமை மருத்துவர் டாக்டர் ராமலிங்கம் மற்றும் அவரது குழுவினர் அறுவை சிகிச்சை, மருத்துவ மற்றும் எஸ்எஸ்ஐஐ குழுக்களுக்கு இந்த விதிவிலக்கான சாதனைக்காக வாழ்த்து தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் நோயாளிகளுக்கு சிறந்தஅணுகக்கூடிய அறுவை சிகிச்சை சிகிச்சையை செயல்படுத்துவதில் இந்த மைல்கல் முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
கோயம்புத்தூர் இந்துஸ்தான் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சதீஷ் பிரபு ,டாக்டர்.VP.சண்முகசுந்தரம், டாக்டர் ராமலிங்கம் மற்றும் அவரது குழுவினரை வாழ்த்தி, தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளையும் செய்து கொடுத்தார்



