அம்ருதா சர்வதேச சட்டப் பள்ளி, “இந்திய அரசமைப்புச் சட்டம் புதிய பரிமாணங்களும் சவால்களும்” என்ற கருப்பொருளில் நான்கு நாள் விரிவுரை தொடர், பட்டறைகள் மற்றும் தேசிய கருத்தரங்கை கோவையில் நடத்தியது.
நிகழ்வின் தொடக்க உரை நிகழ்த்திய கோவாவின் முன்னாள் ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை, இந்தியாவின் அரசமைப்பு வளர்ச்சியைக் குறித்து “சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே 84 உறுப்பினர்கள் கையெழுத்திட்டதன் மூலம் அரசமைப்பு சபையால் இந்த அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது” என்று குறிப்பிட்டு, அதன் உள்நாட்டு அடித்தளத்தை வலியுறுத்தினார்.
“மக்களே உயர்ந் தோர்” என்றும், ஜனநாயகம் மக்களின் கூட்டு விருப்பத்தையே சார்ந்துள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
சிறப்பு விருந்தினர்களான பேராசிரியர் டாக்டர் ஏ.லட்சுமிநாத் மற்றும் பேராசிரியர் யு.கிருஷ்ணகுமார் ஆகியோர் அரசமைப்பு நெறிமுறை, மேலாண்மை மற்றும் ஜன நாயக நிறுவனங்களின் பொறுப்புகள் குறித்து உரையாற்றினர்.
சிஎல்பி ஆரின் வினீத் கிருஷ்ணாவால் பேக்ட் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட அரசமைப்பு வரலாற்றுப் பட்டறை, மாணவர்களை ஆவணப் பொருட்கள் மற்றும் இந்திய அரசமைப்பு செயல் பாட்டுடனும் அறிமுகப்படுத்தியது.
இந்த தேசிய கருத்தரங்கில் பேராசிரியர் டாக்டர் அனிதா ராவ், டாக்டர் மார்கஸ் ரோமானோ, பேராசிரியர் டாக்டர் பிந்து வரியத், அரவிந்தன் ஆனந்தன், சிந்து துளசீதரன், சுராஜ்குமார் பால்பன்ஷ், முனைவர். க்ருஷ் மற்றும் டாக்டர் கல்பனா ராணி ஜெயஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, மாற்றத்திற்குரிய அரசமைப்பு, கூட்டாண்மை மற்றும் சட்டசவால்கள் போன்ற கருப்பொருள்கள் குறித்து கலந்துரையாடினர்.
ஒரு நீதிசார் முன்னோக்கை எடுத்துக் காட்டி, கேரள உயர் நீதிமன்றத்தின் முனைவர்.
ஏ.ஜெயசங்கர், சூழ்நிலையைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, “சூழ்நிலை மிகவும் முக்கியமானது” என்று கூறி, பங்கேற் பாளர்களை அரசமைப்பை ஒரு உயிரோட்டமான, உருமாறும் ஆவணமாகக் கருத ஊக்குவித்தார். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் பி.வெங்கட் ரங்கன் அவர்களின் மதிப்புமிக்க வருகையால் இந்நிகழ்வு சிறப்பிக்கப்பட்டது. அவர் களின் வழிகாட்டலும் ஆதரவும் இந்நிகழ்வுக்கு மிகுந்த முக்கியத்துவத்தை அளித்தது.
இந்நிகழ்வில் அம்ருதா நீதிச் சின்னத்தின் திறப்பு மற்றும் அரசியலமைப்பு மற்றும் நீதி ஆய்வுகளில் ஆராய்ச்சி மற்றும் பொது விவாதங்களை ஆதரிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்ட அம்ருதா அரசமைப்பு மற்றும் நீதிசார் ஆய்வு மையம் (ஏசிஜேஆர்) நிறுவுவதும் அடங்கும்.
நான்கு தொழில்நுட்ப அமர்வுகளிலும், பங்கேற் பாளர்கள் அடித்தளக் கோட்பாடுகள், நீதி முறைகள் மற்றும் அரசமைப்பு தத்துவத்தின் தொடர் பொருத்தம் ஆகிய வற்றை ஆய்வு செய்தனர்.



