fbpx
Homeபிற செய்திகள்இளம் தொழில் முனைவோர்களை உருவாக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றம்

இளம் தொழில் முனைவோர்களை உருவாக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றம்

கோவை நிர்மலா மகளிர் கலை அறிவியல் கல்லூரி இளம் தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கில் அக்கல்லூரியின் தொழில் முனைவோர் பிரிவு செயல்பட்டுவருகிறது.

இதன் தொடர்சியாக கல்லூரி  நிர்வாகம் தொழில் துறை நிறுவனங்களுடன் ஒப்பத்தம் செய்து வருகின்றது. இதில் அல்மயிட்டி ஜெம்ஸ் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் மூலமாக மாணவியர்களுக்கு பயிற்சி வழங்கும் ஒப்பந்தம் செய்யபட்டது.

இதில் கல்லூரி கல்லூரி செயலாளர் அருட்சகோதரி  குழந்தை தெரஷ், முதல்வர் அருட்சகோதரி மேரி பெபியோலா, பேராசிரியர் முனைவர் ந.கிருஷ்ணவேணி மற்றும் அல்மயிட்டி ஜெம்ஸ் நிறுவனர் விஜயராஜ் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிறிஷ்டோ ஜான் நொஸ் கலந்து கொண்டு ஒப்பந்தங்களை செய்து கொண்டனர். 

இது போன்ற புதிய ஒப்பந்தங்களால் மாணவிகளை தொழில் முனைவோர்களாக மாற்ற கல்லூரி  நிர்வாகம் வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளதாக மாணவியர், தொழில் முனைவோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் முனைவர் ந.கிருஷ்ணவேணி தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img