fbpx
Homeபிற செய்திகள்ஹெலிகாப்டர் மூலம் வந்தார், முப்படைகளின் தளபதி வெலிங்டன் பயிற்சி கல்லூரியில் ஆய்வு

ஹெலிகாப்டர் மூலம் வந்தார், முப்படைகளின் தளபதி வெலிங்டன் பயிற்சி கல்லூரியில் ஆய்வு

முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌஹான் வெலிங்டனில் உள்ள முப் படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியை ஆய்வு செய்து, பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌஹான், நேற்று ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அரு கேயுள்ள வெலிங்டன் ராணுவ மையத்துக்கு வந்தார்.

வெலிங்டன் ஜிம்கானா மைதானம்

வெலிங்டன் ஜிம்கானா மைதானத்தில், அவரை முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி முதல்வர் கமாண்டென்ட் லெப்.ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் வரவேற்றார். பின்னர் தளபதி முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் அதிகாரி களிடம் கலந்துரையாடினார்.

வேகமாக மாறிவரும் சூழலில் நிறுவனத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாணவர் அலுவலர்களை தயார்படுத்துவதற்காக கல்லூரியின் பல்வேறு முயற்சிகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது.

கல்லூரியின் பல்வேறு பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பின் திட்டமிடப்பட்ட மேம்படுத்தல் குறித்து வீரேந்திர வாட்ஸ் விளக்கினார்.

பின்னர், பயிற்சி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடம், தளபதி அனில் சௌஹான், தேசிய பாதுகாப்புக்கான சவால்கள் குறித்தும், ஆயுதப் படைகளை வலுப்படுத்துவதற்கான அரசின் முயற்சிகள் குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img