ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற மே தின கொண்டாட்டத்தையொட்டி, ரோட்டரி ஈரோடு சக்ராஸ் கிளப்பின் பரிசு வழங்கும் விழாவிற்கு ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்வைக் கொண்டாடுவதற்காக, மாநகராட்சி ஊழியர்களுக்கு பல்வேறு விளை யாட்டுகளை கிளப் முதன்முறையாக ஏற்பாடு செய்தது.
மாநகராட்சி கமிஷனர் பொறுப்பு தனலட்சுமி, மண்டலத் தலைவர்கள் காட்டுசுப்பு, பி.கே. பழனிசாமி, ரோட்டரி ஆளுநர் டாக்டர் சுரேஷ்பாபு, துணை ஆளுநர் டாக்டர் எஸ். ரமேஷ், மண்டல ஒருங்கிணைப்பாளர் கே. ராமலிங்கம், கிளப் தலைவர் சக்ரா ராஜசேகர், செயலாளர் ஆர். பிரபாவதி, பொருளாளர் எம்.பி. சிவராஜ் மற்றும் பல அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.



