fbpx
Homeபிற செய்திகள்பாரதிதாசன் கல்லூரியில் உலக அமைதி தினம்

பாரதிதாசன் கல்லூரியில் உலக அமைதி தினம்

ஈரோடு பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் உலக அமைதி தினம் கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் இணைச்செயலர் பரிமளாராஜா, கல்லூரியின் முதல்வர் முனைவர் பெ.வானதி, நிர்வாக அலுவலர் இரா.அருள்குமரன், நுண்ணுயிரியல் துறைத்தலைவர் செ.கிருத்திகா ஆகியோர் அமைதியின் சின்னமான புறாவை பறக்கவிட்டனர்.

புறா வடிவத்தில் மாணவர்கள் நின்று உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் அமைதியோடு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பலூன்களை பறக்கவிட்டனர்.

இந்நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img