fbpx
Homeபிற செய்திகள்திண்டுக்கல்லில் நீர்வடிப்பகுதி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

திண்டுக்கல்லில் நீர்வடிப்பகுதி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் செயல்படுத்தப்படும் நீர்வடிப்பகுதி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் சாணார்ப்பட்டி வட்டாரம் கம்பிளியம்பட்டி நீர்வடிப்பகுதியில் ரூ.4.00 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை, ரூ.50,000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மழைநீர் செறிவூட்டல், ரூ.60,000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நீர் உறிஞ்சு குழிகள் மற்றும் பெருமாள், சசிக்குமார் ஆகியோர் நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள மா தோட்டத்தையும், சிங்காரக்கோட்டை நீர்வடிப்பகுதியில் ரூ.4.00 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தடுப்பணை, தங்கவேல் என்பவருக்கு இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட கால்நடை தீவனப்புல்வெட்டும் கருவியின் பயன்பாடு குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசனத் திட்டம் – (PMKSY-WDC-2.0) சாணார்பட்டி, வடமதுரை, வேடசந்தூர், தொப்பம்பட்டி மற்றும் குஜிலியம்பாறை ஆகிய வட்டாரங்களில் உள்ள 28 கிராம ஊராட்சிகளில் 33 நீர்வடிப்பகுதிகளில் ஊராட்சித் தலைவர்கள் தலைமையில் உள்ள நீர்வடிப்பகுதி குழுக்கள் மூலம் 2021-2022-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இயற்கை வள மேலாண்மை, உற்பத்தி அமைப்பு, நிலம் இல்லாத நபர்கள், குறு நிறுவனங்கள் மற்றும் வணிக மேம்பாட்டிற்கான வாழ்வாதார நடவடிக்கைகள் என்ற வகையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் 2021-2022-ஆம் ஆண்டு முதல் இதுவரை பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதில் மொத்தம் ரூ.31.37 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதன் மூலம் 7,683 விவசாயிகள் நேரடியாக பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, வடமதுரை வட்டாரம், நல்லமனார்கோட்டை நீர்வடிப்பகுதியில் விவசாயிகள் சுந்தரராஜ் என்பவருக்கு ரூ.5,000 மதிப்பிலான பேட்டரி தெளிப்பான், குமரேசன் என்பவருக்கு ரூ.33,600 மதிப்பிலான கால்நடைதீவனப்புல் வெட்டும் கருவி, சண்முகவல்லி, கணேசன் ஆகியோருக்கு தலா ரூ.8,000 மதிப்பிலான தார்பாலின்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இதில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் வேளாண்மை துணை இயக்குநர் உமா, உதவிப்பொறியாளர் சகாயராஜ், நீர்வடிப்பகுதி வளர்ச்சி அணி உறுப்பினர்கள் செந்தில்வேல், சௌந்திரராஜன், ராஜகுரு, ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img